ஊத்தங்கரையில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை புதுப்பிக்கும் பணி

ஊத்தங்கரையில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை புதுப்பிக்கும் பணி

அடையாள அட்டை புதுப்பிக்கும் பணி

ஊத்தங்கரையில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை புதுப்பிக்கும் பணி பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சி திருமண மண்டபத்தில் பேரூராட்சிக்கு உட்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு பிரதான் மந்திரி ஆத்மநிர்பர் நிதி திட்டத்தின் கீழ் ஏற்கனவே அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளது.

அதன் மூலம் தொழில் விருத்தி செய்ய தலா பத்தாயிரம் ரூபாய் பிணையில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது அவர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் விதமாக புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டு ஆன்லைன் வாயிலாக கடன் தொகை செலுத்த வசதிகள் செய்யப்பட்ட நிலையில் அடையாள அட்டை புதுப்பிக்கும் முகாம் இன்று ஊத்தங்கரை பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 153 சாலையோர வியாபார பயனாளிகள் கலந்து கொண்டு தங்களது அடையாள அட்டையை புதுப்பித்துக் கொண்டனர்.

Tags

Next Story