கல்லூரியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

கல்லூரியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

சேலம் கிருபானந்த வாரியார் கல்லூரியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

சேலம் கிருபானந்த வாரியார் கல்லூரியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
சேலம் அருகே உள்ள கிருபானந்த வாரியார் பொறியியல் கல்லூரியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதற்கு கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.சசிகுமார் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு கலாசார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக என்.சி.சி. மாணவர்கள் அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர் கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.சசிகுமார் அரசியலமைப்பின் முக்கியத்துவம் மற்றும் அதன் கொள்கைகளை நிலை நிறுத்துவதில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story