இரும்புலியில் மின் கம்பத்தை தள்ளி நட கோரிக்கை

இரும்புலியில் மின் கம்பத்தை தள்ளி நட கோரிக்கை

இடையூறாக உள்ள மின்கம்பம்

இரும்புலியில் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் கம்பத்தை தள்ளி நட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கல்பட்டு ஊராட்சி இரும்புலி வேப்பங்கொட்டை செல்லியம்மன் கோவில் பகுதியில் கூட்டுப் பாதை செல்கிறது. சாலை ஓரத்தில் உள்ள ஒரு மின் கம்பம் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.

கட்டுப்பாட்டை இழக்கும் வாகனம் மின் கம்பத்தில் மோதி விபத்து நடக்கும் முன் கம்பத்தை சற்று தள்ளி நட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story