ஆலமரத்தை அகற்ற கோரிக்கை

ஆலமரத்தை அகற்ற கோரிக்கை

பட்டுபோன ஆலமரம்

ஆலமரத்தை அகற்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

வத்தலக்குண்டு : விராலிப்பட்டியில் 50 ஆண்டு முந்தைய ஆலமரம் கிளை முறிந்து விழுந்ததில் மின் கம்பம் துண்டானது.மரத்தை அகற்ற வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் .விராலிப்பட்டி ஐயப்பன் கோயில் அருகே விவசாய நிலத்திற்கு இடையில் 50 ஆண்டுகளுக்கு மேலான ஆலமரம் கீழே விழும் நிலையில் உள்ளது. ஆலமரத்தில் விழுதுகள் இல்லாததால் பலமின்றி உள்ளது.

நவ.ல் பெய்த கனமழைக்கு கிளை உடைந்து அருகில் உள்ள ஓடையில் விழுந்து முகத்துவாரத்தை அடைத்துக் கொண்டதால் வெள்ளம் கிராமத்திற்குள் புகுந்தது.பலத்த காற்றுக்கு கிளைகள் ஒடிந்து விழுகின்றன. வருவாய் துறையினர் ஆலமரத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என்றனர்.

Tags

Next Story