ஊத்தங்கரை அருகே சாலையை சீரமைக்க கோரிக்கை

ஊத்தங்கரை அருகே சாலையை சீரமைக்க கோரிக்கை

சேதமடைந்த சாலை


படப்பள்ளி ஊராட்சியில் குண்டும் குழியுமான சாலை சரி செய்ய பொது மக்கள் கோரிக்கை.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த படப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பட்டக்கானூர், அம்பேத்கர்நகர், புதுக்காடு ஆகிய கிராமத்திற்கு செல்லும் தார் சாலை, ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். பல ஆண்டுகளாக இந்த சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த நிலையில் உள்ளது.

இதில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் விவசாய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், ஓலா தனியார் கம்பெனிக்குச் செல்லும் வாகனங்கள் இந்த சாலை வழியாக செல்கிறது. அடிக்கடி விபத்து ஏற்படுவதால் வயதானவர்கள் கர்பிணி பெண்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி கிராம மக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே சாலையை சீரமைத்து புதிய தார் சாலை அமைக்க, மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். படவிளக்கம்.5யுடிபி.1. ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சிதிலமடைந்து கக்கும் தார் சாலை.

Tags

Next Story