சாய்ந்த மின் கம்பத்தை மாற்ற கோரிக்கை

சாய்ந்த மின் கம்பத்தை மாற்ற கோரிக்கை

வளைந்த நிலையில் மின்கம்பம் 

ஓரிக்கை அரசு நகரில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்

காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, ஓரிக்கை அரசு நகரில் உள்ள வீடுகள், வணிக வளாகங்களுக்கு மின் இணைப்பு வழங்க சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தனியார் திருமண மண்டபம் அருகில் உள்ள மின்கம்பத்தின் மீது, அவ்வழியாக சென்ற கனரக வாகனம் மோதியதில் மின்கம்பத்தின் அடிபாகம் வளைந்து, கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது.

கனரக வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில் செல்லும் வாகனங்கள், சேதமான மின்கம்பத்தின் மீது மீண்டும் லேசாக உரசினாலே மின்கம்பம் சாய்ந்து விழுந்து மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.



Tags

Read MoreRead Less
Next Story