ஓய்வு பெற்ற தீயணைப்பு வீரர் மாயம் - காவல்துறையினர் விசாரணை

ஓய்வு பெற்ற தீயணைப்பு வீரர் மாயம் - காவல்துறையினர் விசாரணை

 காவல்துறையினர் விசாரணை

காரிமங்கலம் அருகே ஓய்வு பெற்ற தீயணைப்பு வீரர் மாயம் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் காரிமங்கலம் காவல்துறையினர் விசாரணை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலம் பையம்பட்டியனூர் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தீயணைப்பு வீரர் ஆறுமுகம் இவருக்கு வயது 62 . இவரது மனைவி ராஜாமணி இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர் இருவருக்கும் திருமணம் முடிந்து விட்ட நிலையில் ஆறுமுகம்,ராஜாமணி இருவர் மட்டுமே தனியாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் பிப்ரவரி 20 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியில் சென்று விட்டு வருவதாக இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. செல்போனில் இருந்து தொடர்பு கொண்ட போது அனைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் பதற்றம் அடைந்த அவரது மனைவி ராஜாமணி தனது கணவரை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் கிடைக்காததால் காரிமங்கலம் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின்அடிப்படையில் காரிமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காணாமல் சென்ற ஆறுமுகத்தை தேடி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story