ரவுண்டானா சிக்னலில் விபத்து அபாயம்

காங்கேயம் போலீஸ் நிலைய ரவுண்டானா சிக்னலில் கார் கண்ணாடியை சுத்தம் செய்பவர்களால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

காங்கேயம் போலீஸ் நிலைய ரவுண்டானா சிக்னலில் போக்குவரத்துக்கு இடையூராக யாசகம் செய்பவர்க ளால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். யாசகம் செய்பவர்கள், சிக்னலில் பேனா, பென்சில் போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் கார் கண்ணாடியை துடைப்பவர்கள் என தினசரி அளவில் வாகன ஓட்டிகளுக்கு இடையூராக ஆட்கள் நடமாட்டம் அதிகமாக வருகிறது.

இதனால் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் விபத்து ஏற்படும் நிலையும் உள்ளது. காலை மற்றும் மாலை வேளைகளில் வாகன போக்குவரத்து நெரிசலும் மக்களின் அவசர நிலையும் காணப்படும். பச்சை நிற சிக்னல் போட்டவுடன் வண்டிகள் செல்ல தயாராக இருக்கும் நிலையில் ஒரு சில நேரங்களில் இந்த நபர்கள் வாகன நடுவில் மாட்டி கொள்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் நிலை ஏற்படுகிறது. எனவே போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story