ஆற்றுமணல் திருட்டு : மினி வேனை நிறுத்திவிட்டு ஓட்டம்

ஆற்றுமணல் திருட்டு  : மினி வேனை நிறுத்திவிட்டு ஓட்டம்

காவல் நிலையம் 

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் குரங்குபுத்தூர் பகுதியில் ஆற்று மணல் திருட்டில் ஈடுபட்ட மினி வேனை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் குரங்குபுத்தூர் பகுதியில் காவல்உதவி ஆய்வாளர் சுபஸ்ரீ என்பவர் இரவு 11 மணிக்கு ரோந்து சென்றபோது காவிரி ஆற்று மணல் திருடி ஏற்றிச் சென்ற மினிவேனை தடுத்து நிறுத்தினார், போலீசைக் கண்டதும் வேனை நிறுத்திவிட்டு அதன் ’ஓட்டுனர் தப்பியோடிவிட்டார், வேனில் அரை யூனிட் காவிரி ஆற்று மணல் இருந்தது தெரியவந்தது, வேனை நிலையம் கொண்டு சென்று திருட்டு வழக்கு மற்றும் கனிமவள பாதுகாப்புச் சட்டத்தின்கீழும் வழக்குப் பதிவுசெய்து வேன் ஓட்டுனரையும் அதன் உரிமையாளரையும் செம்பனார்கோவில் போலீசார் தேடிவருகின்றனர்

Tags

Next Story