மாமல்லபுரத்தில் சாலை பாதுகாப்பு கண்காட்சி பேருந்து

மாமல்லபுரத்தில் சாலை பாதுகாப்பு கண்காட்சி பேருந்து

அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மாமல்லபுரத்தில் சாலை பாதுகாப்பு கண்காட்சி பேருந்து முகாமிட்டது.


அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மாமல்லபுரத்தில் சாலை பாதுகாப்பு கண்காட்சி பேருந்து முகாமிட்டது.
அரசு போக்குவரத்துக் கழகத்தின் காஞ்சிபுரம் மண்டலம், சாலை பாதுகாப்பு கண்காட்சி பேருந்து, நேற்று மாமல்லபுரம் பஸ் நிலையத்தில் முகாமிட்டது. இந்த பேருந்தில், அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவதை தவிர்த்து, மிதமான வேகத்தில் ஓட்டுவது, சாலை அடையாள குறியீடுகளை பின்பற்றி செல்வது, மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். மேலும், வாகனம் ஓட்டும்போது, மொபைல்போனில் பேசுவதை தவிர்ப்பது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகள் இடம் பெற்றிருந்தன. இதை தொடர்ந்து, போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் விளக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Next Story