நீதிமன்ற ஊழியரின் பைக் கொள்ளை - குற்றவாளி கைது

நீதிமன்ற ஊழியரின் பைக் கொள்ளை - குற்றவாளி கைது

குற்றவாளி கைது

நாகர்கோவிலில் நீதிமன்ற ஊழியரின் பைக்கை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டம் மாதவலாயம் பகுதியை சேர்ந்தவர் இம்ரான்கான் (34). இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். சம்பவ தினம் தனது பைக்கை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி இருந்தார். பணி முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. இது குறித்து இம்ரான்கான் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கோட்டாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களும் ஆய்வு செய்யப்பட்டன. இதில் இரணியல் அருகே உள்ள கட்டிமாங்கோடு பகுதியை சேர்ந்த ஆனந்த முருகன் (34) என்பவர் பைக்கை திருடி சென்றது தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி, ஆனந்த முருகனை நேற்று சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். ஆனந்த முருகன் மீது ஏற்கனவே இரணியல் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Tags

Read MoreRead Less
Next Story