3000 நபர்களுக்குமேல் இறந்தவர்களின் பெயரில் 100 நாள் வேலை சம்பளம் சுருட்டல்

3000 நபர்களுக்குமேல் இறந்தவர்களின் பெயரில்   100 நாள் வேலை சம்பளம் சுருட்டல்

இறந்தவர்களின் பெயரில் 100 நாள் வேலை சம்பளம் சுருட்டப்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்க மனு அளிக்கப்பட்டுள்ளது.

3000 நபர்களுக்குமேல் இறந்தவர்களின் பெயரில் 100.நாள் வேலை சம்பளம் சுருட்டப்பட்டுள்ளதால், நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் குறை தீர் முகாமில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில், உள்ள 54 பஞ்சாயத்துகளிலும், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இறந்தவர்களது, பெயரில், 100 நாள் வேலைத்திட்ட, பணிகள் செய்ததாக, அவர்களது வங்கிக் கணக்கில், பணம் போடப்பட்டு, வங்கி பணியாளர், சிலர் உதவியுடன் பணிதள பொறுப்பாளர்கள், ஒரு சிலரால் நிதி மோசடி, செய்யப்படுவதாக , மயிலாடுதுறை மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று மக்கள் குறைதீர் முகாமில் , மாவட்ட வருவாய் அலுவலர், மணிமேகலையிடம் ,வில்லிய நல்லூரைச் சேர்ந்த, சமூக ஆர்வலர் ,சரவணன் ,மீண்டும் கோரிக்கை வைத்தார். இதுகுறித்து, உடன் நகை எடுக்க, மாவட்ட வருவாய் அலுவலர் ,மணிமேகலை உத்தரவிட்டார்.

Tags

Next Story