அரசு தோட்டக்கலைப் பண்ணையில் தென்னங்கன்றுகள் விற்பனை

அரசு தோட்டக்கலைப் பண்ணையில் தென்னங்கன்றுகள் விற்பனை

தென்னகங்கன்று

செங்கல்பட்டு மாவட்டம்,ஆத்தூரில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் தென்னங்கன்றுகளை விவசாயிகள் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு அடுத்த ஆத்துாரில், 30 ஏக்கர் பரப்பளவில், அரசு தோட்டக்கலை பண்ணை உள்ளது. இங்கு மர வகைகள், செடிகள், மிளகாய், கத்தரி நாற்றுகள், மருத்துவ செடிகள், அழகு செடிகள் போன்றவை உற்பத்தி செய்து, விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது, இந்த பண்ணையில் நடவுக்கு தயாராக உள்ள உயர் ரக விளைச்சல் தரக்கூடிய, 30,000 அரசம்பட்டி நெட்டை ரக தென்னங்கன்றுகள் விற்பனைக்கு தயாராக உள்ளன.

ஒரு தென்னங்கன்று 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள், வேலை நாட்களில் நேரடியாக வந்து வாங்கி செல்லலாம் என, தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்புக்கு, 91595 46757 என்ற எண்ணை அழைக்கலாம்.

Tags

Next Story