சட்டவிரோத மது மற்றும் லாட்டரி விற்பனை

சட்டவிரோத மது மற்றும் லாட்டரி விற்பனை

சட்டவிரோத மது விற்பனை

சேலம், அஸ்தம்பட்டி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போது சட்டவிரோத மது மற்றும் லாட்டரி விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் அஸ்தம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் போலீசார் அஸ்தம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு லாட்டரி சீட்டு விற்றதாக தாதகாப்பட்டியை சேர்ந்த அங்கமுத்து (வயது 55) என்பவரை போலீசார் கைது செய்து லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர். இதற்கிடையே மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அர்த்தனாரீஸ்வரன் தலைமையில் போலீசார் குப்பனூர் பெரிய பாலம் பகுதியில் ரோந்து சென்ற போது மது விற்றதாக குப்பனூர் பகுதியை சேர்ந்த அய்யப்பன் (49), முத்துக்குமார் (40) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 24 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story