கம்பைநல்லூரில் புகையிலை பொருட்கள் விற்பனை :5 கடைகளுக்கு சீல்

கம்பைநல்லூரில் புகையிலை பொருட்கள் விற்பனை :5 கடைகளுக்கு சீல்

சீல் வைக்கும் அதிகாரிகள்


கம்பைநல்லூரில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

தர்மபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆலோசனைப்படி, உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறை இணைந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மேற்பார்வையில் குழுக்கள் உருவாக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக மாவட்டம் முழுவதும் ஆய்வுகள் நடத்தப்பட்டு விதிமுறைகளை கடைபிடிக்காத புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டும்

சில கடைகள் செயல்பட தடை உள்ளிட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து கம்பைநல்லூர்,இருமத்தூர் மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தலைமையில் குழு உறுப்பினர் சிறப்பு நிலை காவல்உதவி ஆய்வாளர் முருகன், கம்பைநல்லூர் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் ஹரிச்சந்திரன் மற்றும்
காவலர்கள் சாமிதுரை, பட்டாபி உள்ளிட்ட குழுவினர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கம்பைநல்லூர்

இருமத்தூர் சாலை பகுதியில் உள்ள ஒரு பீடா கடை, வகுரப்பம்பட்டியில் 2 மளிகை கடைகள் மற்றும் இருமத்தூரில் பள்ளி அருகில் ஒரு பெட்டி கடை மேலும் மருதிப்பட்டி சாலை , சுண்டைக்காப்பட்டியில் ஒரு மளிகை கடை என 5 கடைகளில் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து கம்பைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் பரிந்துரையின் பேரில் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா உத்தரவின் பேரில் கடைகள் மூடி கடை செயல் பட தடை விதித்து நோட்டீஸ் வழங்கியதுடன்

முதல் தகவல் அறிக்கை பதிந்த 3 கடைக்காரர்கள் தவிர்த்து முதல் முறையாக பிடிபட்ட சுண்டக்காப்பட்டி மளிகை கடை மற்றும் கம்பைநல்லூர் பகுதியில் மீண்டும் தடை செய்த புகையிலை பொருட்களை விற்பனை செய்த பீடா கடைக்காரர்க்கும் முறையே தலா 5 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட்டு மறு உத்தரவு வரும் வரை கடை திறக்க கூடாது என எச்சரித்து கடை மூடி,கடை கதவில் நோட்டீஸ் ஒட்டி சாவியை எடுத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினமும் இதே போல் கடத்தூர் மற்றும் மொரப்பூர் பகுதியில் 5 கடைகளுக்கு சீலிடப்பட்டது குறிப்பிடப்தக்கது.மேலும் இது போன்ற ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெறும் என காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்தனர்

Tags

Next Story