சேலம் பாமக வேட்பாளர் கரும்பு சாறு பிழிந்து கொடுத்து வாக்கு சேகரிப்பு

சேலம் பாமக வேட்பாளர் கரும்பு சாறு பிழிந்து கொடுத்து வாக்கு சேகரிப்பு

கரும்பு சாறு பிழிந்து கொடுத்த வேட்பாளர்

சேலம் பாமக வேட்பாளர் கரும்பு சாறு பிழிந்து கொடுத்து வாக்கு சேகரித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் சேலம் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் அண்ணாதுரை மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இன்று மேற்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட அங்கம்மாள் காலனி, வன்னியர் நகர், மெய்யனூர்,

காசக்காரனூர், திருவாகவுண்டனூர், உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது மெய்யனூர் பகுதியில் உள்ள கரும்பு சாறு கடையில் வாக்கு சேகரித்த அண்ணாதுரை தொண்டர்களுக்கு கரும்பு சாறு பிழிந்து கொடுத்தார். வாக்குசேகரிப்பின் போது சட்டப்பேரவை உறுப்பினர் அருள், பசுவைத்தாயக மாநில இணை செயலாளர் சத்ரியசேகர், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story