சலூன் கடைக்காரர் வெட்டிக் கொலை

சலூன் கடைக்காரர் வெட்டிக் கொலை

கொலை

தூத்துக்குடியில் முன் விரோதத்தில் சலூன் கடைக்காரர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி முத்தையாபுரம் பொன்னாண்டி நகரைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் ஆண்டியப்பன் (42). சலூன் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் சுப்பையா மகன் மகேஷ் (38). இவரது மனைவிக்கும் ஆண்டியப்பனுக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு மகேஷ் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவரது அண்ணன் குமாரசாமி (46) என்பவர் ஆண்டியப்பன் மீது ஆத்திரம் அடைந்தார். அவரை கொலை செய்ய வேண்டும் என்று நோக்கத்தில் திட்டம் தீட்டினார்.

இந்நிலையில்,நேற்று இரவு ஆண்டியப்பன் அவரது வீட்டு அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த குமாரசாமி தான் மறைத்து வைத்திருந்த அருவாளால் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். இதில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆண்டியப்பனை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் வழக்குப் பதிந்து, குமாரசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story