மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியவர் கைது

மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியவர் கைது

கைது செய்யப்பட்டவர் 

பாபநாசம் அருகே வெட்டாற்றிலிருந்து மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமேகலை சப் இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் ஏட்டு முத்துக்குமார் ஆகியோர் பாபநாசம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது பொன்மான் மேய்ந்தநல்லூர் பகுதியில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வெட்டாறு ஆற்றில் இருந்து 5 மணல் மூட்டைகளை திருடிக் கொண்டு வந்து கொண்டிருந்தார் அப்போது போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் சோலை பூஞ்சேரி விக்னேஷ் வயது 25 என்பது தெரியவந்தது மோட்டார் சைக்கிள் 5 மணல் மூட்டைகளையும் போலீஸ்சார் பறிமுதல் செய்து வாலிபர் விக்னேஷ் கைது செய்து வழக்கு பதிவு செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். நீதிபதி அப்துல் கனி வாலிபர் விக்னேஸை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்

Tags

Next Story