மேலநீலிதநல்லூரில் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி

மேலநீலிதநல்லூரில் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி
மேலநீலிதநல்லூரில் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி மாவட்டம், பாண்டியாபுரம் அரசுப்பள்ளியில் நடைப்பெற்ற ஆண்டு விழாவில் மாணவ மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது. உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பராசக்தி, வட்டார கல்வி அலுவலர் கவிதா ஆகியோர் தலைமை தாங்கினர். முதன்மை கல்வி அலுவலர் முத்தையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பள்ளி வளர்ச்சிக்கு உதவிய நன்கொடையாளர்கள் பாராட்டப்பட்டனர். இதில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் மைக்கேல்ராஜ் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story