வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல் - போலீஸ் பாதுகாப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல் - போலீஸ் பாதுகாப்பு
வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல்
தென்காசி மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. மேலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் தென்காசி, கடையநல்லூர், வாசுதேவ நல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லி புத்தூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையமான தென்காசி கொடிக்குறிச்சி யுஎஸ்பி கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனி அறைகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டன. பின்னர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ஏ. கே. கமல் கிஷோர் மற்றும் தேர்தல் பொதுப் பார்வையாளர் டோபேஷ்வர் வர்மா தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார், தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பு அறைக்கு சீல் வைக்கப்பட்டது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றிலும் போலீஸ் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story