அறம் அரசு புறம்போக்கு இடத்தில் மண் அள்ளிய ஐந்து வாகனங்கள் பறிமுதல்

அறம் அரசு புறம்போக்கு இடத்தில் மண் அள்ளிய ஐந்து வாகனங்கள் பறிமுதல்

கெஜக்கோம்பையில் அறம் அரசு புறம்போக்கு இடத்தில் மண் அள்ளிய ஐந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


கெஜக்கோம்பையில் அறம் அரசு புறம்போக்கு இடத்தில் மண் அள்ளிய ஐந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

எருமப்பட்டி ஏப்ரல் 18 எருமப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொட்டிரெட்டிபட்டி ஊராட்சியில் உள்ள கெஜக்கோம்பையில் தொடர்ந்து மண் அள்ளப்பட்டு வருவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் வந்தது இதை அடுத்து நேற்று காலை கெஜ கோம்பையில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் அனுமதி இல்லாமல் மர்ம நபர்கள் மண் அள்ளுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு சென்ற வருவாய் துறையினர் பார்த்த பொழுது இரண்டு ஜேசிபி இயந்திரம் மூலம் 3 டிப்பர் லாரிகளில் மண் அள்ளி ஏற்றப்பட்டது தெரியவந்தது.

இந்த நிலையில் அதிகாரிகள் வந்தது அறிந்த ஓட்டுனர்கள் தப்பி சென்று விட்டதை அடுத்து வாகனங்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் எருமப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்து கஜக்கொம்பை கிராம நிர்வாக அலுவலர் செல்வம் எருமப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததைஅடுத்து அந்த வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

Tags

Read MoreRead Less
Next Story