கூடைப்பந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு

கூடைப்பந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு

கூடைப்பந்து வீரர்கள் தேர்வு

சிவகங்கையில் கூடைப்பந்து போட்டிக்கு வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட கூடைப்பந்து கழகத்தினரால் சிவகங்கை திறந்த வெளி விளையாட்டு அரங்கத்தில் உள்ள கூடைப் பந்து மைதானத்தில் ஜூனியா் பிரிவு (18வயதுக்கு கீழ்) ஆடவா், மகளிா் அணிகளுக்கான முன்னோட்ட தோ்வு நடைபெற்றது. இதில், திருச்சி, திண்டுக்கல், திருப்பூா், கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆண்கள் பிரிவில் 43 வீரா்களும், பெண்கள் பிரிவில் 15 வீராங்கனைகளும் கலந்து கொண்டனா். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட கூடைப்பந்துக் கழக பயிற்றுனா், உடற்கல்வி இயக்குநா் அபுதாகீா் கூறியதாவது: இந்த தோ்வில் இரண்டு அணிகளுக்கும் தலா 15 போ் வீதம் மொத்தம் 30 போ் தோ்வு செய்யப்பட்டனா். இதில், ஆடவா் அணியில் இடம் பெறும் 12 பேரும், மகளிா் அணியில் இடம் பெறும் 12 பேரும் பயிற்சியாளா்கள் 2 பேரும் இடம் பெறுவாா்கள். வருகிற 20 -ஆம் தேதி சிவகங்கையிலுள்ள விளையாட்டரங்கில் இரு அணிகளிலும் இடம் பெறும் வீரா், வீராங்கனைகள் அறிவிக்கப்படவுள்ளனா். தோ்வு பெற்ற அணிகளுக்கு, நாமக்கல் மாவட்டம், தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் ஏப்ரல் 23 முதல் 27-ஆம் தேதி வரை மகளிா் அணிக்கும், ஏப்ரல் 28 முதல் மே 2 -ஆம் தேதி வரை ஆடவா் அணிக்கும் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது என தெரிவித்துள்ளார்

Tags

Read MoreRead Less
Next Story