தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனத்திற்கு குவியும் வாழ்த்துகள்

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகைக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமனத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் (OBC) பிரிவு மாநில துணைத் தலைவர் டாக்டர் P.V.செந்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "தொண்டர்களை மதித்து நடக்கும் மனிதநேய மிக்கவர் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் தமிழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி." தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவராக ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் K.செல்வப்பெருந்தகை அவர்களை, காங்கிரஸ் தலைமை நியமனம் செய்துள்ளது மிக்க மகிழ்ச்சி. அவர்களுக்கு எனது வாழ்த்துகளை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

காரணம், அவரது தலைமையின் கீழ், தமிழக சட்டசபையில் காங்கிரஸ் கட்சியானது மிகுந்த எழுச்சியை பெற்று வீறுநடை போட்டது. அந்த வீறுநடை இனி மாநில அளவில் இருக்கும். மிகவும் சாதாரணமான தொண்டராக கட்சியில் சேர்ந்த செல்வப் பெருந்தகை படிப்படியாக பல்வேறு பொறுப்புகளை வகித்து தற்போது தமிழக சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக செவ்வனே பணி செய்து வந்தார்.

மிகவும் சாதாரணமான தொண்டர்கள் தன்னை சந்திக்க வந்திருந்தாலும் அவருக்கு உரிய மரியாதையை அளித்து அவரது குறையயை கவனமுடன் கேட்டறிந்து அதை கவனமாக பரிசீலித்து, அந்த தொண்டரின் பிரச்சினையை தீர்ப்பது வரை ஒவ்வொரு இடத்திலும் அவரது மனிதநேயத்தை பார்க்க இயலும். தொண்டர்களின் உணர்வுகனள மதிக்கும் அத்தகைய மனித நேய பண்பாளர் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக வந்துள்ளது எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த காங்கிரஸ் கமிட்டியின் தொண்டர்களுக்கும் கண்டிப்பாக மகிழ்ச்சியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை” என கூறியுள்ளார்.

Tags

Next Story