சேத்துப்பட்டில் பள்ளி மாணவர்கள் யோகாசனம்!

சேத்துப்பட்டில் பள்ளி மாணவர்கள் யோகாசனம்!

சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் யோகாசனம் செய்தனர்.


சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் யோகாசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் காளிமுத்து, ஆசிரியைகள் அலமேலு, சரஸ்வதி ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு யோகாசனம் செய்வது எப்படி ,அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி செயல் முறை விளக்கத்துடன் செய்து காண்பித்தனர் .இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.

Tags

Next Story