தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற கடைக்கு சீல் 

தடை செய்யப்பட்ட  புகையிலை விற்ற கடைக்கு சீல் 
கடைக்கு சீல் 
பளுகல் பகுதியில் தொடர்ந்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்காரர் கைது. மேலும் கடைக்கு சீல் 
கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் பகுதியில் சுரேஷ்குமார் (45) என்பவர் கடை நடத்தி வருகிறார். இவர் கடையில் தொடர்ந்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது கடையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது கடையிலிருந்து ஒரு கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, .அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை அடுத்து அவர் கடையில் நேற்று போலீசார் முன்னிலையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story