குடிநீர் பற்றாக்குறை : காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

மண்ணாடிபட்டியில் முறையாக குடிநீர் விநியோகிக்க கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த புதூர் புங்கனை ஊராட்சிக்கு உட்பட்ட மண்ணாடிபட்டி கிராமப் பகுதியில் நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்சனை இருந்து வந்த நிலையில் பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கவுன்சிலரிடம் கேட்டதாக கூறப்படுகிறது கோடை வெப்பம் சுட்டெரிக்கும் சூழ்நிலையில் குடிப்பதற்கு கூட குடிநீர் கிடைக்காத நிலையில் உள்ளதால் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக கல்லாவி காவல் துறையினர் நேரில் வந்து சமாதான பேச்சுவார்த்தைக்கு பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது இப்பகுதி மக்களுக்கு உரிய குடிநீர் கிடைக்க பஞ்சாயத்து நிர்வாகத்திடம் காவல்துறையினர் அறிவுறுத்தினர்

Tags

Read MoreRead Less
Next Story