ஆலங்குடி தொகுதியில் சிவகங்கை அதிமுக வேட்பாளர் பிரச்சாரம்!

ஆலங்குடி தொகுதியில் சிவகங்கை அதிமுக வேட்பாளர் பிரச்சாரம்!

வாக்கு சேகரிப்பு


ஆலங்குடி தொகுதியில் சிவகங்கை அதிமுக வேட்பாளர் பிரச்சாரம்!
சிவகங்கை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ், ஆலங்குடி தொகுதியில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை மாலை பிரசாரம் மேற்கொண்டார். ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட ஆலங்குடி, கல்லாலங்குடி, கீழாத்தூர், வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் வாக்குசேகரித்து அவர் மேலும் பேசியது: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி ப. சிதம்பரத்தால் சிவகங்கை தொகுதிக்கு எவ்விதப்பயனும் இல்லை. மேலும், கஜா புயலால் ஆலங்குடி பகுதி விவசாயிகள் முற்றிலும் வாழ்வாதாரத்தை இழந்து நின்றபோது, இருவரும் மக்களைச் சந்தித்து ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை. ஆனால், அதிமுக அரசு, மக்களோடு மக்களாக களத்தில் நின்றது. இதேபோல, மக்கள் தொண்டாற்ற மக்கள் எனக்கு தொன வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.பிரசாரத்தின்போது, அதிமுக நிர்வாகிகள் துரை.தனசேகரன், ராஜ பாண்டியன், தர்ம.தங்கவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story