மகன் மாயம் - தாய் புகார்

மகன் மாயம் - தாய் புகார்

காவல் நிலையம் 

சங்கராபுரம் அருகே காணாமல் போன மகனை கண்டுபிடித்து தருமாறு அவரது தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த விரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தருமர் மகன் மணிகண்டன், 30; சென்னையில் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 2 மாதமாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த மணிகண்டன் கடந்த மாதம் 25ம் தேதி வீட்டில் இருந்து பைக்கில் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் பாப்பாத்தி அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story