வேலூர் : சொர்க்கவாசல் திறப்பு - கோவிந்தா கோஷமிட்ட பக்தர்கள்

வேலூர் : சொர்க்கவாசல் திறப்பு - கோவிந்தா கோஷமிட்ட பக்தர்கள்

சொர்க்கவாசல் திறப்பு

வேலூர் வேலப்பாடி பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
வேலூர் மாவட்டம் வேலூர் வேலப்பாடி ஸ்ரீ பெருந்தேவித் தாயார் உடனுறை அருள்மிகு வரதராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா, பரமபத வாசல் திறப்பு விழா , தசமி பெரு நம் திருமஞ்சன சேவை, திரு பார்வை இயல் சேவை, கருட சேவை , ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ நம்மாழ்வருடன் பரமபத வாசல் எழுந்தருளிச் சேவை வெகு விமர்சையாக நடைபெற்றது . இப்பூவுலகில் அருள்பாலித்து மதிநலம் உயர்வற உயர்நலம் உடையவனாய் கலந்துறைந்து அனைத்துயிர்களுக்கும் திருவருள் சேவை சாதிக்கும் பொருட்டு, அறிபுதியாக திருக்கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் காட்சியை சுமார் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து வைகுண்ட ஏகாதேசி பரமபத வாசல் திறப்பதை பக்தர்கள் கண்டு வழிபட்டனர்.

Tags

Next Story