பதற்றமான ஓட்டு சாவடி மையங்களில் எஸ்பி ஆய்வு

பதற்றமான ஓட்டு சாவடி மையங்களில் எஸ்பி ஆய்வு

பதற்றமான வாக்குசாவடிகளில் ஆய்வு 

கள்ளகுறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் பதற்றமான ஓட்டுச்சாவடி மையங்களை எஸ்.பி., ஆய்வு செய்தார்.
பதற்றமான ஓட்டுச்சாவடியாக அறிவிக்கப்பட்டுள்ள சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடி மையத்தை எஸ்.பி., சமய்சிங் மீனா பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின் தேர்தல் பணியில் இருந்த டி.எஸ்.பி., குகனிடம் தேர்தல் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ஓட்டுச்சாவடி மையம் அருகே தேவையின்றி கூட்டம் கூடுவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். பின் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள வடமாநில துணை ராணுவ படையினரிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் உடனிருந்தார்.

Tags

Read MoreRead Less
Next Story