ஆயுதப்படை கவாத்து பயிற்சி

ஆயுதப்படை கவாத்து பயிற்சி

காவந்து பயிற்சி

தூத்துக்குடி காவல் அலுவலக மைதானத்தில் நடைப்பெற்ற ஆயுதப்படை காவல்துறையினரின் கவாத்து பயிற்சியை எஸ்பி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி ஆயுதப்படை காவல்துறையினரின் கவாத்து பயிற்சி மாவட்ட காவல் அலுவலகம் மைதானத்தில் வைத்து இன்று காலை நடைபெற்றது. கவாத்து பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் ஆய்வு செய்து, ஆயுதப்படை காவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தகுந்த அறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் புருஷோத்தமன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் பழனிச்சாமி, உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story