வைகாசி முதல் ஞாயிறு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்

வைகாசி முதல் ஞாயிறு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்

நாமக்கல் ஆஞ்சிநேயருக்கு சிறப்பு பூஜை

வைகாசி மாதம் முதல் ஞாயிற்று கிழமையையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம். ஆஞ்சநேயர் சுவாமிக்கு 1,008 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற்றது.

மாதந்தோறும் தமிழ் மாத முதல் ஞாயிற்று கிழமை நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறுவது வழக்கம்.

இன்று (மே-19)வைகாசி மாதம் முதல் ஞாயிற்று கிழமையையொட்டி ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.மதியம் 1 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.சிறப்பு அலங்காரத்தில், சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதில், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள்,

பங்கேற்று சுவாமியை வழிபட்டுச் சென்றனர். இன்று வழக்கத்திற்கு மாறாக ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Tags

Next Story