வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் உயிரிழப்பு!

வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் உயிரிழப்பு!

புள்ளி மான் உயிரிழப்பு

காரைக்குடி செல்லும் புறவழிச்சாலையில் வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் இறந்து கிடந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் இருந்து காரைக்குடி செல்லும் புறவழிச்சாலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கு அருகே வாகனத்தில் அடிபட்ட நிலையில் சுமார் 3 வயதுடைய புள்ளிமான் ஒன்று நேற்று இறந்து கிடந்தது. தகவலறிந்ததும் வனச்சரக அலுவலர் குமார் மற்றும் வனத்து றையினர் வந்து புள்ளி மான் உடலை எடுத்து சென்றனர். கால்நடை டாக்டர் பிரேத பரிசோதனை செய்ததும் வனத்துறை அலுவலகம் அருகே மான் உடல் புதைக்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story