ஸ்ரீகெங்கையம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் - பக்தி பரவசத்தில் பக்தர்கள்

ஸ்ரீகெங்கையம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் - பக்தி பரவசத்தில் பக்தர்கள்

ஸ்ரீகெங்கையம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

ஸ்ரீ கெங்கையம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் செவிலிமேடு டாக்டர் அம்பேத்கர் நகரில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ கெங்கையம்மன்ஸ்ரீ துலக்கானத்தம்மன் திருக்கோவிலில் "ஓம் சக்தி பராசக்தி" என விண்ணை முட்டும் பக்தி கரகோஷங்களுடன் மகா கும்பாபிஷேகமானது இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவில் நகரமான காஞ்சிபுரத்தில், செவிலிமேடு அம்பேத்கர் நகரில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ கெங்கையம்மன் மற்றும் ஸ்ரீ துலக்கானத்தம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள ஸ்ரீ கெங்கையம்மன் , ஸ்ரீ துலக்கானத்தம்மன் விமானம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் எனும் திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

அதையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு கோ பூஜை,தனபூஜை, ஸ்ரீவிக்னேஷ்வர பூஜை,மஹா பூர்ணாஹுதி நடத்தப்பட்டு இரண்டாம் கால யாக வேள்வி, மூன்றாம் கால யாகம் முடிவுற்று இன்றைய தினம் நான்காம் கால யாகமாக நவகிரஹ ஹோமம், மஹா பூர்ணாஹுதி நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து யாக சாலைகளில் இருந்து கலசங்கள் புறப்பாடாகி மங்கள இசை,மேளத்தாள வாத்தியங்களுடன் சிவாச்சாரியார்கள் கோபுர விமானங்களுக்கு எடுத்துச் சென்று கூடியிருந்த திரளான பக்தர்களின் விண்ணை முட்டும் "ஓம் சக்தி பராசக்தி" பக்தி கோஷங்களுடன் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோபுர கலசங்கள் மீது ஊற்றப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டு,பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு, மஹா கும்பாபிஷேகமானது வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதனையடுத்து மூலவர் ஸ்ரீ கெங்கையம்மன் மற்றும் ஸ்ரீ துலக்கானத்தம்மனுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனைகளும் நடைபெற்றதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர். மேலும் வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானங்களும், அம்பாளின் அருட்பிரசாதங்களும் வழங்கப்பட்டது. இந்த மஹா கும்பாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story