தியாகதுருவம் அருகே ஓட்டல் ஊழியர் திடீர் மரணம்

தியாகதுருவம் அருகே ஓட்டல் ஊழியர் திடீர் மரணம்

 ஓட்டல் ஊழியர் திடீர் மரணம்

தியாகதுருவம் அருகே ஓட்டல் ஊழியர் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த நிலையில் மரணம். போலீசார் வழக்கு பதிவு.
கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த அய்யாவு மகன் பெரியசாமி,50; இவர் சூளாங்குறிச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். நேற்று காலை இவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story