திமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல்

திமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல்

பெரம்பலூரில் திமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தலை எம் எல் ஏ பிரபாகரன் திறந்து வைத்தார்.


பெரம்பலூரில் திமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தலை எம் எல் ஏ பிரபாகரன் திறந்து வைத்தார்.
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க, பெரம்பலூர் நகர் 15 வது வார்டு துறையூர் சாலை, அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகில், பெரம்பலூர் நகர திமுக சார்பில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக நகர செயலாளருமான பிரபாகரன் தலைமையில் கோடை கால நீர் மோர், தண்ணீர் பந்தல் திறப்புவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன் தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன் பொதுக்குழு உறுப்பினர் முகுந்தன் கிருஷ்ணசாமி பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மாரிக்கண்ணன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவசங்கர் மாவட்ட மகளிர் அணி தலைவர் பாத்திமா, திமுக நகரக் துணைச் செயலாளர் சபியுல்லா நகரக் பொருளாளர் அசாருதீன் மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன் நகர்மன்ற உறுப்பினர்கள் சிவகுமார் ரஹ்மத்துல்லா, சித்தார்த் வார்டு கழக செயலாளர்கள் முத்துக்குமார், ராஜ்செந்தில், சந்திரசேகர், கனகராஜ், செந்தில், மணிகண்டன், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story