கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
கஞ்சா வைத்திருந்தவர் கைது
கன்னியாகுமரியில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா அதிக அளவில் விற்பனை நடப்பதாக எழுந்த புகாரின் பேரில் போலீசார் கஞ்சாவை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன்படி நேற்று கன்னியாகுமரி பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் 200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் பெயர் அனிஷ் (21) என்பதும், அவர் கோவளம் பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. அவரை கைது செய்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story