கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

வாலிபர் கைது

மரக்காணம் அருகே போலீசாரின் வாகன சோதனையில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே அனுமந்தை பகுதியில் ஈசிஆர் சாலையில் நேற்று மதியம் மரக்காணம் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுவையில் இருந்து பைக்கில் வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். போலீசார் அவரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அவரிடம் 10 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்துள்ளது. இதனால் போலீசார் அந்த வாலிபரை மரக்காணம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவர் மரக்காணம் அருகே அனுமந்தை மீனவர் பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பிரதீப்ராஜ் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.

Tags

Next Story