நர்ஸை பாட்டிலால் குத்திய வாலிபர்: பேஸ்புக் காதலால் விபரீதம்

நர்ஸை பாட்டிலால் குத்திய வாலிபர்: பேஸ்புக் காதலால் விபரீதம்

பைல் படம்

சேலத்தில் மருத்துவமனைக்குள் புகுந்து நர்ஸை பாட்டிலால் வாலிபர் குத்தியதால் பரபரப்பு உண்டானது.

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பேஸ்புக் மூலம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராசிபுரத்தை சேர்ந்த வாலிபர் அறிமுகம் ஆகியுள்ளார். பின்னர் இந்த பழக்கம் காதலாக மாறியது.

இந்த நிலையில் வாலிபரின் நடவடிக்கைகள் சரியில்லாததால் அவருடன் பழகுவதை அந்த பெண் நிறுத்திக்கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் நேற்று மாலை ஆஸ்பத்திரிக்குள் புகுந்து நர்சிடம் தகராறில் ஈடுபட்டு மறைத்து கொண்டு வந்த பீர் பாட்டிலால் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அந்த பெண் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆஸ்பத்திரிக்குள் புகுந்து வாலிபர் நர்சை பாட்டிலால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story