கவுன்சிலருக்கு நன்றி தெரிவிப்பு !
நன்றி தெரிவிப்பு
தெரு விளக்கு அமைப்பதற்காக கவுன்சிலருக்கு நலச்சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 52வது வார்டு அன்னை கதிஜா கார்டன் நலச்சங்க தலைவர் கமால்தீன் தலைமையில் இன்று (மார்ச் 6) 52வது வார்டு மாமன்ற உறுப்பினர் நித்திய பாலையாவை நேரில் சந்தித்து தங்களது பகுதியில் தெரு விளக்கு அமைப்பதற்காக நன்றி தெரிவித்து பொன்னாடை அணிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ மாநகர மாவட்ட பொதுச்செயலாளர் கனி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story