திமுக கூட்டணியினருக்கு நன்றி - முஸ்லிம் லீக் மா.செ அறிக்கை

திமுக கூட்டணியினருக்கு நன்றி - முஸ்லிம் லீக் மா.செ அறிக்கை

 மீராசா மரைக்கார்

திமுக கூட்டணி கட்சிக்கு தேர்தல் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட தலைவர் மீராசா மரைக்கார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மீராசா மறைக்கார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட இந்திய கூட்டணியின் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் திமுக துணை பொதுச் செயலாளர் கவிஞர் கனிமொழி கருணாநிதி க்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரிப்பதற்காக இரவும் பகலும் பாராமல் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் , களப்பணி ஆற்றிய. தேர்தல் நெருங்கி வந்துவிட்டால் தேனியாய் சுழன்று உழைத்து விடுவாய் உடன்பிறப்பே என்ற நாகூர் அனிபா அவர்களுடைய பாடலுக்கு ஏற்றது போல் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் வெற்றிக்கு பாடுபட்ட திமுக, காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும், அதனுடைய தலைவர்களுடைய சொல் ஏற்று களப்பணியாற்றிய அனைவருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி சார்பில் மனதார நன்றி வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story