பூதப்பாண்டி நீதிமன்ற கட்டிடத்தை உடனே திறக்க வேண்டும்

பூதப்பாண்டி நீதிமன்ற கட்டிடத்தை உடனே திறக்க வேண்டும்
குமரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்த பாரதிய ஜனதாவினர்
பூதப்பாண்டி நீதிமன்ற கட்டிடத்தை உடனே திறக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு
பாரதிய ஜனதா மத்திய அரசு நலத்திட்ட பிரிவின் கன்னியாகுமரி மாவட்ட துணை தலைவர் ரஜினிகாந்த் என்பவர் தலைமையில் நேற்று குமரி கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- பூதப்பாண்டி நீதிமன்றத்திற்கு சொந்தமாக கட்டிடம் இல்லாத காரணத்தால் பல வருடங்களாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தற்போது கடந்த ஓராண்டுக்கு முன்பாக பூதப்பாண்டி பேருந்து நிறுத்தம் அருகே நீதிமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. பழைய கட்டிடத்தில் போதிய வசதிகள் இல்லாததால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடம் திறக்கப்படாமல் உள்ளதால் வளாகத்தை சுற்றி புதர் மண்டி கிடக்கிறது. இதனால் இந்த புதிய கட்டிடத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா துணைத் தலைவர் சொக்கலிங்கம், விஷ்வ இந்து பரிசத் மாநில இணைச் செயலாளர் காளியப்பன், மாநகரத் தலைவர் நாஞ்சில் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story