ஆட்டோவை வழிமறித்து தாக்கிய போதை கும்பல் !

ஆட்டோவை வழிமறித்து தாக்கிய போதை கும்பல் !

ஆட்டோ

திருப்புவனம் அருகே ஆட்டோவை வழிமறித்து தாக்கிய போதை கும்பலால் பரபரப்பு ஏற்ப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களின் காவல் தெய்வமாக இருப்பது பூமாரியம்மன் ரேணுகாதேவி கோயில். இங்கு ஆண்டுதோறும் பத்து நாட்கள் மாசி திருவிழா நடைபெறும், தினசரி சுற்றுவட்டார கிராமமக்கள் நேர்த்தி கடன் விரதமிருந்தும், அக்னிசட்டி எடுத்தும் ஆயிர கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்நிலையில் கடந்த வாரம் 5ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது. நேற்று இரவு திருவிழாவை முன்னிட்டு பல்வேறு கிராமங்களில் இருந்தும் கோவிலுக்கு பக்தர்கள் வந்து சென்றனர். இந்நிலையில் திருப்புவனம் பகுதியில் இருந்து ஆட்டோவில் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு வீட்டிற்கு செல்லும் போது அந்த வழியாக வந்த போதை ஆசாமிகள் சிலர் கோவிலுக்கு வந்து விட்டு சென்ற ஆட்டோவை மறித்து ரகளையில் ஈடுபட்டனர். இதில் அச்சம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் வண்டியை எடுத்து செல்லும் போது விரட்டி சென்ற போதை இளைஞர்கள் ஆட்டோவில் கண்ணாடியையும் உடைத்தனர், 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் பல்வேறு பகுதியில் இருந்தும் பல்லாயிர கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் கோவிலுக்கு போதிய காவலர்கள் பணியில் ஈடுபடாமல் ஒரே ஒரு பெண் காவலர் மட்டும் பேருக்கு பணியில் அமர்த்தி உள்ளதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story