பெண்ணை ஆபாசம் படம் எடுத்து மிரட்டியவர் கைது !

பெண்ணை ஆபாசம் படம் எடுத்து மிரட்டியவர் கைது !

கைது

பெண்ணை ஆபாசம் படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன் மகன் பிரவீன் குமார், 26. இவர், 19 வயது பெண் ஒருவருடன் நெருங்கி பழகினார். ஆசை வார்த்தை கூறி, அவருடன் உல்லாசமாக இருந்துவிட்டு அதனை போட்டோ எடுத்து வைத்துக் கொண்டார். இதனை வைத்து அப்பெண்ணை மிரட்டி உல்லாசமாக இருந்துள்ளார். நேற்று முன்தினம் அப்ப பெண்ணின் வீட்டிற்கு சென்ற பிரவீன் குமார் பணம் கேட்டு மிரட்டியதுடன், தரவில்லை என்றால் வாட்ஸ் ஆப்பில் போட்டோவை அனுப்பி விடுவேன் என்று மிரட்டினார். புகாரின் பேரில் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் வழக்கு பதிந்து பிரவீன் குமாரை கைது செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story