சொந்த சகோதரரை  கொலை செய்ய முயன்றவர் கைது

சொந்த சகோதரரை  கொலை செய்ய முயன்றவர் கைது

சொந்த சகோதரரை  கொலை செய்ய முயன்றவர் கைது

கன்னியாகுமரி மாவட்டம், கீழ ஆசாரிப்பள்ளம் பகுதியில் முன்விரோதத்தால் சகோதரனை கொலை செய்ய முயன்றவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், கீழ ஆசாரிப்பள்ளம், வடக்கு தெருவை சேர்ந்தவர் சார்லஸ் மகன் ஜார்ஜ் மிக்கேல் சைமன். இவருக்கும் இவரது சகோதரர் ஆண்டனி ஜோசப் கிங் (42) என்பவருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவ தினம் ஜார்ஜ் மிக்கேல் சைமன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது ஆண்டனி ஜோசப் கிங் அங்கு சென்று கல்லை தூக்கி அவர் மீது போட்டுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த ஜாதி மிக்கேல் சைமன் அங்குள்ள மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக ஆசாரிப்பள்ளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் ஆசாரிப்பள்ளம் போலீசார் ஆண்டனி ஜோசப் கிங்கை கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story