வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் செயின் பறிப்பு

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் செயின் பறிப்பு
பைல் படம்
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் செயினை மர்மநபர் பறித்த சம்பவம் கருங்கல் அருகே அரங்கேறியுள்ளது.

குமரி மாவட்டம் கருங்கல் அருகே காக்கவிளை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் மனைவி சரோஜினி (69). இவர்களது பிள்ளைகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. இதனால் தற்போது மகதுடன் வசித்து வருகின்றனர். மகன் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மகனின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். இரவில் புழுக்கமாக இருந்ததால் சரோஜினி ஜன்னலை திறந்து வைத்து விட்டு படுத்து உள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலை ஜன்னல் வழியாக ஒருவர் கையை விட்டு சரோஜனியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் எடையுள்ள செயினை பறித்துள்ளார்.

திடீரென விழித்த சரோஜினி செயினை கெட்டியாக பிடித்ததால், செயின் அறுந்து ஒரு துண்டு கிடைத்தது. செயினில் மூன்று பவுன் திருடனிடம் சிக்கியது. அறுந்த செயினுடன் திருடன் தப்பி சென்று விட்டான். இந்த சம்பவம் தொடர்பான புகாரின் பேரில், கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story