24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசார்

ஊத்தங்கரை அருகே கத்தியை காட்டி செயின் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளியை 24 மணி நேரத்தில் குற்றத் தடுப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி அருகே இரண்டு நாட்களுக்கு முன்பு கல்லாவி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனியாக சென்ற பெண்ணிடம் கத்தியை காட்டி செயின் பறிப்பில் ஈடுபட்ட தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த சுண்டக்கா பட்டி பகுதியை சேர்ந்த தனுஷ் என்ற குற்றவாளியை காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையிலான குற்றத் தடுப்பு பிரிவு காவலர்கள் 24 மணி நேரத்தில் குற்றவாளியை பல்வேறு சிசிடிவி காட்சிகளில் அடையாளம் கண்டு காவல் உதவி ஆய்வாளர் கணேஷ் பாபு சிறப்பு உதவி ஆய்வாளர் சீனிவாசன், முதன்மை காவலர் வடிவேல்,பிரபாகரன், மணிவேலன், ஆண்டியப்பன், உள்ளிட்டோர் குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைக்க தயார் செய்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story