பெண்ணை சிறை பிடித்த பொதுமக்கள்

பெண்ணை சிறை பிடித்த பொதுமக்கள்

சுய உதவி குழுவில் பெண் மோசடி

சுய உதவி குழுவில் கடன் வாங்கி கொடுப்பதாக கூறி மோசடி செய்த பெண்ணை சிறை பிடித்த பொது மக்கள்.
குமரி மாவட்டம் குழித்துறை பகுதி சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் குலசேகரம் அருகே வண்டலூர் பகுதியில் உள்ள பெண்களிடம் சுய உதவி குழுக்களில் கடன் பெற்று தரும் முகவர் என்று கூறி அறிமுகமாகியுள்ளார். பின்னர் அந்தப் பகுதியில் உள்ள 14 பெண்களை ஒரு குழுவாக அமைத்து அவரிடம் இருந்து வங்கியில் இருந்து கடன் 4 லட்சம் வீதம் வாங்கி கொடுப்பதாக கூறி அவர்களிடம் ரூ 3. 10 லட்சம் பெற்றுள்ளார். ஆனால் கூறியபடி வங்கி கடன் வாங்கி கொடுக்காமல் காலம் தாழ்த்தியுள்ளார். அந்த பெண் நேற்று மீண்டும் அந்த பகுதிக்கு சென்றார். அப்போது அந்தப் பெண்ணை சுய உதவி குழுவினர் சிறை பிடித்தனர். அத்துடன் தாங்கள் கொடுத்த முழு தொகையும் கொடுத்தால் தான் விடுவேன் என்று கூறி போராட்டம் நடத்தினர். பொதுமக்களும் அங்கு திரண்டனர். தகவல் அறிந்த குலசேகரம் போலீசார் அந்தப் பெண்ணை மீட்டு போலீஸ் நிலையத்தில் அழைத்து சென்று விசாரித்தனர். இதை அடுத்து இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி, அப்போது அந்த பெண் தான் அணிந்திருந்த 70, ஆயிரம் மதிப்பிலான தங்க நகையை பெண்களிடம் கொடுத்துவிட்டு, மீதி பணத்தை வருகிற சனிக்கிழமைக்குள் தந்து விடுவதாக கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags

Next Story