நாமக்கல்லில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

நாமக்கல்லில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

நாமக்கல்லில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப்பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

நாமக்கல்லில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் கோட்ட பொறியாளர் அலுவலகத்தில், தொடர் காத்திருப்பு போராட்டம் துவங்கியது. சங்க கோட்டத் தலைவர் ஜாகீர் உசேன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் வேலு விஜயன், இணைச்செயலாளர்கள் ராமலிங்கம், ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் பாலசுப்ரமணியன் துவக்கி வைத்து, போராட்டம் குறித்து விளக்கி பேசினார். தமிழ்நாடு சார்நிலை பணியமைப்பு விதிகளின்படி, முதல்நிலை பட்டியலை முறைப்படுத்த வேண்டும். தகுதி வாய்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். சாலை பணியாளர்கள் சாலை பராமரிப்பு பணி மேற்கொள்வதற்கு உரிய கருவி, தளவாடங்கள் மற்றும் காலணி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பவை உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, கோஷம் எழுப்பினர். சங்க மாநில செயற்குழு உறுப்பினர் பழனிசாமி, பொதுச்செயலாளர் அம்சராஜ், மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story