கெங்கவல்லி காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

கெங்கவல்லி காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
காவல் நிலையம் 
கெங்கவல்லி காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அருகேநடுவலூரைச் சேர்ந்த அங்கமுத்து மகன் தமிழரசு(24). இவர் கூரியர் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். கூடமலையை சேர்ந்த செந்தில் மகள் சுபிக்ஷா(22). இவர் பிஎஸ்சி படித்துள்ளார். தமிழரசு, சுபிக்ஷா இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இதையறிந்த சுபிக் ஷாவின் பெற்றோர், மகளுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதனால், காதல் ஜோடி, கடந்த 24ம்தேதி வீட்டை விட்டு வெளியேறி, நடுவலூர் புத்துமாரியம் மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நேற்று, பாதுகாப்பு கேட்டு கெங்கவல்லி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

எஸ்ஐ நிர்மலா, இருவரின் பெற்றோரை காவல் நிலையத்துக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி னார். திருமணத்தை சுபிக்ஷாவின் பெற்றோர் ஏற்க மறுத்து விட்டனர். இதையடுத்து அவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு, தமிழரசுடன் சுபிக்ஷாவை அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story